October 07, 2013

எப்போதேனும்
என் கனவுத் தோட்டத்திற்கு வாயேன்.

பின்வாசல் வழியாகவேனும்.


October 03, 2013

எதையாவது
கொண்டுவந்து தரவேண்டும்
என்றுதான்  எண்ணம்.
அடைத்துக் கொண்டு வந்த
டப்பாக்களைத் திறந்து பார்த்தால்
வெறுமைதான் தின்னுகிறது.

வேறெதைக் கொண்டுவர?

வனத்தில் திரியும்
பட்டாம்பூச்சி இதழ்களின் வண்ணம்.
வீட்டின்முன் தோட்டத்தில் பூத்திருக்கும்
கொடிமல்லியின் வாசம்.
வேலிக்கிடை ஓடையில் மினுக்கும்
மின்மினியின் வெளிச்சம்.
நெடுஞ்சாலையில் வெட்டப்பட்டு வீழ்ந்த
ஆலின் நிழல்.
படகாய் மடிபட்ட ஓலையில் ஊற்றிய
பதநீரின் சுவை.
எல்லா வுயிர்க்கும் ஈந்தருளும்

இயற்கையின் கருணை.