நேற்றுபோல்
இன்றையநாள் இருந்துவிடக்கூடாது
என்பதே
இன்றைய வேண்டுதல்.
நேற்றையநாள் ஒன்றும்
மோசமில்லை.
அப்படியேதான்.
ஊனுண்டு
களித்து
கழித்து
அளவளாவி
உறங்கி
என
எல்லாம் சுமுகமே.
ஆனாலும் –
நேற்று நேற்றாய்
மட்டும்
இருந்தாலே
இன்று இன்றாய்
இருக்க ஏலும்
நாளை நாளையாகவும்.