January 23, 2016

நேற்றுபோல்
இன்றையநாள் இருந்துவிடக்கூடாது
என்பதே
இன்றைய வேண்டுதல்.

நேற்றையநாள் ஒன்றும்
மோசமில்லை.
அப்படியேதான்.
ஊனுண்டு
களித்து
கழித்து
அளவளாவி
உறங்கி
என
எல்லாம் சுமுகமே.

ஆனாலும் –
நேற்று நேற்றாய் மட்டும்
இருந்தாலே
இன்று இன்றாய்
இருக்க ஏலும்

நாளை நாளையாகவும்.

No comments:

Post a Comment