January 21, 2016

மஹபூபுல்லாஷா காதிரி
என் தாத்தனென்று
சொன்னால்
உங்களுக்கு
புரியாமல் போகலாம்.
கோபம்கூட வரலாம்.

நீங்கள்…
மனதால்
பிரிந்து கிடக்கிறீர்கள்.
மதங்களாலும்.

உண்மைகள்
உங்கள் செவிநுனி விளிம்பில்
காத்துக் கிடக்கின்றன.
அவை –
கதவைத் தட்டும்போதெல்லாம்
நீங்கள்
உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
அல்லது
ஆழ்ந்த போதையிலிருக்கிறீர்கள்.

ஆயினும் –
சொல்லித்தான் ஆகவேண்டும்….
நான் –
மஹபூபுல்லாஷா காதிரியின்
பேரனென்பதை.
மட்டுமல்ல –
ஆதம் அவ்வாவின்
மக னென்பதையும்.

No comments:

Post a Comment