உங்களுக்கான சுதந்திரம்
எனக்கில்லையென்பதை
முதலில் நீங்கள்
உணருங்கள்.
நீங்கள் –
சாலைகளில் காலாற
நடந்து செல்லலாம்.
சாலை திரும்பாத
இடங்களில் கூட
திரும்பிச் செல்லலாம்.
வளைவற்ற இடங்களில்
வளைந்தும்
நெளிவற்ற இடங்களில்
நெளிந்தும்
செல்லலாம்.
கூடவே –
வட்டச் சுழல்களையும்
உண்டாக்கிச் செல்லலாம்
நானோ …
ஒரு
சமரசவாதியோ
அல்லது
சன்மார்க்கவாதியோ
என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment